News August 14, 2025
லால்குடி கார் விபத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு

லால்குடி அருகே மாந்துறை என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கார் ஒன்று டூவீலர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் விஸ்வநாதன், சாதிக் பாஷா, அரவிந்த், கார்த்திகேயன் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 5 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நபில் உசேன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News August 14, 2025
சுதந்திர தினத்தையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பொது விருந்து

நாளை (ஆகஸ்ட் 15) 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் மதியம் 12 மணிக்கு பொது விருந்து நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து தரப்பினரும் ஏற்றத்தாழ்வு இன்றி அமர்ந்து ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் இந்த பொது விருந்து நடக்க இருப்பதாகவும் இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
News August 14, 2025
திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் மூன்று நாட்கள் ரத்து

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது வரும் 15,18, 21 ஆகிய தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து, கரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 14, 2025
திருச்சி: பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் சஸ்பெண்ட்

திருச்சி, பொன்மலை அருகே கடந்த ஆக.8 அன்று அஞ்சலக பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காணக்கிளியநல்லூர் காவல் நிலைய 2ஆம் நிலை காவலர் கோபாலகிருஷ்ணன் மீது பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று சிறையில் அடைத்தனர். இதனையடுத்து தமிழக காவல்துறை ஒழுங்கு விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டதால் காவலர் கோபாலகிருஷ்ணனை பணியிட நீக்கம் செய்து திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார்.