News July 24, 2024
லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

திருவாரூர் புது காலனி பகுதியைச் சேர்ந்த அமர்நாத் (22), இவர் ஸ்டூடியோவில் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று தனது இருசக்கர வாகனத்தில் சன்னாநல்லூரில் இருந்து திருவாரூர் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழபணங்குடி அருகே லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
திருவாரூர் மாவட்டத்தில் 222 பேர் ஆப்சென்ட்

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 02) தொடங்கியது. இதற்கு 6045 மாணவர்கள் 7223 மாணவிகள் என 13268 பேர் 61 தேர்வு மையங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் நேற்று நடந்த தேர்வில் 5941 மாணவர்கள் 7105 மாணவிகள் என 13046 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மொத்தம் 222 மாணவ-மாணவிகள் நேற்று தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News March 3, 2026
திருவாரூர்: மாமனாரை தாக்கிய மருமகன் கைது

நடுவக்களப்பாலை சேர்ந்த அனுப்ரியா. இவரது கணவர் ரமேஷுக்கு குடி பழக்கம் இருப்பதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று அனுப்பிரியாவின் தந்தை லட்சுமணன் ஏன் குடித்துவிட்டு சண்டை போடுகிறாய் என ரமேஷை கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரமேஷ் அருகில் கிடந்த கம்பியால் லட்சுமணனை தாக்கியதில் அவர் காயமடைந்தார். இந்த புகாரின் பேரில் களப்பால் போலீசார் ரமேஷை கைது செய்தனர்.
News March 2, 2026
திருவாரூர்: ATM கார்டு இருக்கா ? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

திருவாரூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? RBI விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – ரூ.10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <


