News November 22, 2025

லாரி முன்பு பாய்ந்து பெண் தற்கொலை.

image

கோவை வால்பாறையை சேர்ந்தவர் தனலட்சுமி(40). இவர் கோவை விளாங்குறிச்சி சாலையில் நேற்று தனது ஆண் நண்பருடன் நடந்து சென்றுள்ளார். அப்போது, திடீரென அவ்வழியே வந்த லாரி முன்பு பாய்ந்து விழுந்ததில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் ஆண் நண்பருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 22, 2025

ரூ.15,000 பரிசு: கோவையில் VIRAL POSTER

image

கோவை கணபதி பகுதியை சேர்ந்த கதிர் குடும்பம் வளர்த்து வந்த வெள்ளை நிற கிராக்டேயில் “மியா” கிளி வகையைச் சேர்ந்த பறவை கடந்த அக்டோபர் 29-ல் பறந்துச் சென்றது. இதையடுத்து குடும்பத்தினர் கோவையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.15,000 பரிசு வழங்கப்படும் என்றும், அதை “மியா” அல்லது “PEEK-A-BOO” என்று அழைத்தால் வந்து விடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

News November 21, 2025

பாராளுமன்றம் முடக்கி மெட்ரோ வாங்குங்கள்: எஸ்.பி. வேலுமணி

image

கோவையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த பூத் கமிட்டி கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். திமுக எம்பிக்கள் இதற்காக பாராளுமன்றத்தில் போராடி முடக்கம் செய்ய வேண்டும் என்றும், 2026-ல் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி திட்டம் நிறைவேறும் என்றும் தெரிவித்தார்.

News November 21, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (21.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!