News April 22, 2024

லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

image

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் இருந்து அரியலூர் கலெக்டர் அலுவலகம் வரை 12 வேகத்தடைகள் உள்ளது. இந்த வேகத்தடைகள் பெயரளவிற்கு மட்டுமே போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் லாரிகளால் அடிக்கடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ,வேகத்தடைகளை ஆய்வு செய்து முறையான வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News January 9, 2026

அரியலூர் வருவாய் துறைக்கு 5 புதிய வாகனங்கள் வழங்கல்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நேற்று (ஜன.8) அரியலூர் வருவாய்த் துறைக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 5 புதிய வாகனங்களை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் நகர மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், அரசு அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News January 9, 2026

அரியலூர் மாவட்டத்தில் 200 போக்சோ வழக்குகள் பதிவு!

image

அரியலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் கீழ் கடந்த ஆண்டு 200 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட 43 பெண்கள் உள்பட 294 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குழந்தை திருமணத்தால் நடந்த போக்சோ குற்றத்திற்காக 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா. சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

அரியலூர் மாவட்டத்தில் 200 போக்சோ வழக்குகள் பதிவு!

image

அரியலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் கீழ் கடந்த ஆண்டு 200 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட 43 பெண்கள் உள்பட 294 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குழந்தை திருமணத்தால் நடந்த போக்சோ குற்றத்திற்காக 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா. சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!