News September 6, 2025

லட்சங்களில் வீடுகளைக் கட்டித் தந்த ஓய்வு பெற்ற துணைவேந்தர் !

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்ற பாலகுருசாமி (79). தற்போது கோவை வடவள்ளியில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பணிபுரியும் கார் டிரைவர் புவனேஷ்வரன், சமையல், வீட்டு வேலை, தோட்ட வேலை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பாக்யா, கிருஷ்ணவேணி, பிரபாவதி ஆகிய 4 பேருக்கும் மருதமலை சாலையில் உள்ள ஐஓபி காலனியில் தனித்தனியாக தலா ரூ.80 லட்சத்தில் வீடுகள் கட்டி கொடுத்துள்ளார்.

Similar News

News April 8, 2026

மருதமலைக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு

image

தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்று, மருதமலை முருகன் கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் மலைப்பாதையில் நடந்தோ அல்லது கோயில் நிர்வாகம் இயக்கும் சிறப்பு பேருந்துகள் மூலமாகவோ மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2026

கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க எர்ணாகுளம் – முசாபர்பூர் இடையே கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் (06085/06086) இயக்கப்பட உள்ளன. எர்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 10, 17, 24 ஆகிய தேதிகளிலும், முசாபர்பூரில் இருந்து ஏப்ரல் 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில்கள் புறப்படும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்படி வழியாக செல்லும்.

News April 8, 2026

கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க எர்ணாகுளம் – முசாபர்பூர் இடையே கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் (06085/06086) இயக்கப்பட உள்ளன. எர்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 10, 17, 24 ஆகிய தேதிகளிலும், முசாபர்பூரில் இருந்து ஏப்ரல் 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில்கள் புறப்படும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்படி வழியாக செல்லும்.

error: Content is protected !!