News March 20, 2025
லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 16 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

கோவை சின்னவேடம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில், உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த துரைராஜிடம், கடந்த 2009 ஆம் ஆண்டு, மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த தனபாக்கியம், மின் இணைப்பை மாற்றி வழங்க கோரி, ரூ.300 லஞ்சம் கொடுத்தார். அப்போது போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
Similar News
News March 21, 2025
கோவை ரயில்வே பயணிகள் கவனத்திற்கு

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக, திருவனந்தபுரம் வடக்கு – ஷாலிமார் இடையே, வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் வடக்கு – ஷாலிமார் ரயில் 28.03.2025 மற்றும் 04.04.2025 ஆகிய தேதிகளில், 4.20 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, 13.40 மணிக்கு ஷாலிமாரை சென்றடையும் என ரயில்வே துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
News March 21, 2025
கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே நகரின் சில பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக, பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோவை மாவட்டத்தில் சில இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News March 21, 2025
மருதமலையில் ஏப்.4ல் கும்பாபிஷேகம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் மகேஷ்குமார் நேற்று கூறியதாவது: கோவை மருதமலை கோவிலில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலைகள் அமைக்கும் பணிகள், வண்ணம் பூசும் பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது என்றார்.