News May 30, 2024
லஞ்சம் வாங்கியதாக பத்திரப்பதிவு சார்பதிவாளர் கைது

மேலூர் அருகே கருங்காலக்குடி பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கருங்காலக்குடி சார்பதிவாளர் அருள்முருகனிடம் இருந்து ரூ.1.85,700 லஞ்சம் பெற்றதாக கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அருள் முருகன் கைது செய்யப்பட்டார். மேலும் தற்காலிக பணியாளர்கள் சிலரிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News September 11, 2025
மதுரையில் ஹரியானா மாநிலத்தவர் பரிதாபமாக பலி

ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தென்கரை அருகே லாரி வந்தபோது லாரியை நிறுத்தி உதவியாளர் முஃபீத் சாலையோரம் இயற்கை உபாதைக்காக சென்றார். திருப்பி வரும்போது பின்னாலிருந்து வந்த லாரி அவர் மீது மோதியதில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்டு போலீசார் விசாரணை.
News September 11, 2025
மதுரை: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

மதுரை மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<
News September 11, 2025
மதுரையில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரயில்

மதுரையில் இருந்து பீகாருக்கு வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 17-ஆம் தேதி முதல் இயக்கப்பட இருக்கிறது. மதுரை-பரூணி சிறப்பு ரயில் வண்டி எண் 06059 மதுரையில் இருந்து வருகிற 17-ஆம் தேதி 24ஆம் தேதி மற்றும் நவம்பர் 3,15 ,22, 29 இயக்கப்பட இருக்கிறது. அதேபோன்று மறு மார்க்கமாக வண்டி எண் 06060 வருகிற 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமை புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு மதுரை வந்தடையும்.