News February 8, 2025
லஞ்சம் தொடர்பான புகார் / தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் சார்பில் அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுக்கள் / கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் இலஞ்சம் கேட்டால் தயங்காமல் எங்களிடம் புகார் / தகவலை நேரிலோ கைபேசி வாயிலக தெரிவிக்கலாம்.மேலும் டிஎஸ்பி வேல்முருகன்-6369693803,இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத்-9442223011,இன்ஸ்பெக்டர் ஹேமாமாலினி 9498150600 அலுவலக தொலைபேசி-04175-232619 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
Similar News
News August 21, 2025
தி.மலை மக்களே இந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா

கடந்த ஆண்டு 30 பேர் தி.மலை மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2000 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டு, 8 பேருக்கு தொழுநோய் உறுதி செய்யபட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தீவிர தொழுநோய் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொழுநோயை பற்றி தெரிந்து கொள்ள இங்கு <<17469663>>கிளிக்<<>> பண்ணுங்க.
News August 21, 2025
தி.மலை: தொழுநோய் அறிகுறிகள்

தோலில் நிறமாற்றம், உணர்ச்சியற்ற தேமல், தோல் தடித்து காணப்படுதல், தோல் பளபளப்பாக இருத்தல் அல்லது எண்ணெய் பூசியது போல் இருத்தல் போன்றவை இதன் அறிகுறிகள். அறிகுறிகள் தென்பட்டால் பயம் கொள்ளாமல் அருகில் உள்ள அரசு மருத்துவ மனைகள் மூலம் 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிகிச்சை பெற்று குணமடையலாம். *ஷேர் பண்ணுங்க. முன்னதாகவே தற்காத்து கொள்வது சால சிறந்தது*
News August 21, 2025
தி.மலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறும் இடங்கள் அதன் விவரம் மேலே உள்ள படத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, வாரிசு, வருமானம், இருப்பிடம், சாதி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களுக்கு மனு அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம். மேலும் இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.