News December 20, 2025

ரோஹித்தை வெளியில் உட்கார வைக்க மும்பை முடிவு

image

விஜய் ஹசாரே டிராபி தொடரில் முதல் 2 போட்டிகளில் வெளியில் ரோஹித், ஜெய்ஸ்வால், துபே, ரஹானேவை உட்கார வைக்க மும்பை அணி முடிவு செய்துள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி பரிசோதிக்கவே இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது. வரும் 24-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. முன்னதாக, அனைத்து இந்திய அணி வீரர்களும் இந்த தொடரில் விளையாட வேண்டும் என BCCI அறிவுறுத்தி இருந்தது.

Similar News

News December 26, 2025

₹44,900 சம்பளம்.. +2 போதும்: APPLY HERE

image

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 311 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, Law. வயது வரம்பு: 18 – 35. சம்பளம்: ₹19,900 – ₹44,900. இதற்கான விண்ணப்பம் டிச.30-ல் தொடங்கி ஜன.29-ல் முடிவடைகிறது. மேலும் தகவல் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க.

News December 26, 2025

குழந்தை பாக்கியம் அருளும் வெள்ளிக்கிழமை விரதம்!

image

விரதங்களிலேயே சிறந்தது என வெள்ளிக்கிழமை விரதத்தை முன்னோர்கள் கருதுகின்றனர். இதை சுக்கிரவார விரதம் என்றும் குறிப்பிடுகின்றனர். அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர் என்று நம்பப்படுகிறது. அதேபோல சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு உண்டாகும், நினைத்த காரியங்கள் நிறைவேறும், செல்வவளம் உண்டாகும் எனவும் சொல்லப்படுகிறது.

News December 26, 2025

திமுக முக்கிய அமைச்சர் கைதாகிறாரா?

image

கடலூரில் அரசு பஸ் டயர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 9 பேர் பலியான சம்பவத்தில் <<18672003>>ஓட்டுநர் தாஹா அலியின் கைது<<>> சர்ச்சையாகியுள்ளது. திமுக அரசு, TNSTC பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதை மறைக்க ஓட்டுநரை பலிகடா ஆக்குவதா என அதிமுக, பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் அத்துறையின் அமைச்சர் சிவசங்கர், மேலாளரை போலீசார் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!