News January 17, 2025

ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

Similar News

News August 14, 2025

ராணிப்பேட்டையில் பிறந்து 8 நாளில் குழந்தை உயிரிழப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு காந்திநகரைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரின் 8 நாள் பெண் குழந்தை, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அஜித்குமார், மருத்துவமனை முன்பு பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News August 14, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு 9884098100 அழைக்கலாம்.

News August 13, 2025

ராணிப்பேட்டை: குற்றவாளிக்கு 20 வருடம் சிறை தண்டனை

image

ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பாலியல் குற்றம் புரிந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தணிகாசலம் (45) என்பவருக்கு 20 வருடங்கள் கடும் காவல் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் என ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தால் இன்று (ஆகஸ்ட் 13) தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகளை எஸ்.பி. பாராட்டினார்.

error: Content is protected !!