News August 21, 2025
ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று(ஆக.20) இரவு 11 மணி முதல் இன்று(ஆக.21) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
Similar News
News August 20, 2025
மயிலாடுதுறை மக்களே உஷார்..! லோன் மோசடி!

நமது மயிலாடுறை மக்களே உஷார்! வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இப்படியாக வரும் அழைப்புகள் மூலம் அதில், உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இது போன்று பலர் ஏற்கனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இது போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக இந்த 1930 எண்ணுக்கு அழைத்து புகாரளியுங்கள். SHARE IT.!
News August 20, 2025
மயிலாடுதுறை: வாராந்திர மனு விசாரணை நாள்

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மனு விசாரணை நாள் இன்று(ஆக.20) நடைப்பெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், சம்பந்த காவல்ர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் . மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயன்பெற்றனர்.
News August 20, 2025
மயிலாடுதுறை: டிகிரி போதும்! SBI வங்கியில் வேலை

மயிலாடுதுறை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே <