News November 6, 2025
ரோடு ஷோவை தடை செய்ய வேண்டும்: திருமாவளவன்

அரசியல் கட்சிகளிடையே சமமற்ற நிலையை ஏற்படுத்தும் ரோடு ஷோவை தடை செய்ய வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பணம் உள்ள கட்சிகள் ரோடு ஷோ நடத்தித் தமக்கு செல்வாக்கு இருப்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். இது வாக்காளர்களிடம் தாக்கத்தை உண்டாக்குகிறதாகவும் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 28, 2026
ஜனவரி 28: வரலாற்றில் இன்று

1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. 1933 – பாகிஸ்தான் என்ற பெயர் சௌத்ரி ரஹ்மத் அலியால் உருவாக்கப்பட்டது. 1865 – இந்திய சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் பிறந்த தினம். 1986 – நடிகை ஸ்ருதி ஹாசன் பிறந்த தினம். 1997- சிறுபான்மையின சமூக ஆர்வலர் பழனி பாபா நினைவு தினம்.
News January 28, 2026
காசாவில் மீட்கப்பட்ட கடைசி பணயக் கைதியின் உடல்!

காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடைசி பணயக்கைதியின் உடலை இஸ்ரேல் பாதுகாப்பு படை மீட்டது. காசாவில் போர் நிறுத்த அறிவிப்புக்கு பின், பணய கைதிகளை மீட்கும் பணி இஸ்ரேல் தீவிரம் காட்டி வந்தது. அதன்படி ஹமாஸால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 24 வயது இஸ்ரேலிய போலீஸ் சார்ஜென்ட் ரான் கவிலியின் உடல் 843 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. இவர் 2023 அக்.7-ம் தேதி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 28, 2026
சளி காரணமாக குரல் கரகரப்பாக இருக்கிறதா?

சளி காரணமாக உங்கள் குரல் கரகரப்பாக இருப்பதற்கோ அல்லது குரல் இழப்பிற்கோ குரல்வளை அழற்சியே காரணம். ஏனெனில், இத்தொற்றினால் குரல் நாண்கள் வீக்கமடையும். எனவே விரைவாக குணமடைய, பேசாமல் தொண்டைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். வெதுவெதுப்பான உப்பு நீரால் வாய் கொப்பளிப்பதும், தேன் அருந்துவதும் வீக்கத்தைக் குறைக்கும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்வும் டாக்டர்கள் கூறுகின்றனர்.


