News May 14, 2024
ரேஷன் பொருட்களுக்கு தட்டுப்பாடு?

மதுரை மாவட்டத்தில் மே மாதத்திற்கான ரேஷன் பொருள்களான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை சில பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் மத்தியில் புகாா் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த மாதத்துக்கான சா்க்கரை, அரிசி மட்டுமே வந்துள்ளதாகவும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்கள் பெரும்பாலான ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படாததால், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.
Similar News
News September 12, 2025
ரயில் பாதைகள் மின்சார பாதைகளாக மாற்றம்

மதுரை கோட்டத்தில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் பிரிவு தவிர மற்ற அனைத்து ரயில் பாதைகளும் ஏற்கனவே மின்மயமாக்கப்பட்டுவிட்டன. ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் பாதையை மின் மயமாக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த புதிய மின் பாதையில் நாளை (செப் 13) முதன்மை தலைமை மின்சார பொறியாளர் கணேஷ் ஆய்வு நடத்த இருப்பதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
News September 12, 2025
எடப்பாடி பழனிசாமி மதுரை வருகை

மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் தாயார் மீனாள் அம்பாள் மறைவையொட்டி அவரது திருவுருவப் படத்தை நாளை மறுநாள் (செப்.14) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூர் அம்மா கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.
News September 12, 2025
மதுரையில் திருநங்கை திடீர் தற்கொலை..!

மதுரை அஹிம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை இசக்கிமுத்து (எ) தீபிகா 29. இவர் சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார். அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்லும் இசக்கிமுத்து (எ) தீபிகா நேற்று வீட்டிற்கு வந்தபோது சரிவர யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். அடுத்த சிறிது நேரத்தில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.