News December 27, 2025
ரேஷன் கார்டு ரத்து.. அரசு முக்கிய அறிவிப்பு

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்கள் e-KYC சரிபார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அரசு அறிவித்திருக்கிறது. இந்த e-KYC-ஐ சரியான காலக்கெடுவிற்குள் முடிக்காவிட்டால், ஜனவரி 1-ஆம் தேதி முதல் உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது நிறுத்தப்படலாம். நீங்கள் ஆன்லைன் மூலமோ (அ) ரேஷன் கடைக்கு நேரடியாக சென்றோ, e-KYC சரிபார்ப்பைச் சுலபமாக முடித்துக் கொள்ளலாம். SHARE IT.
Similar News
News December 27, 2025
மக்கள் அதிகம் சென்ற கோயில்கள் PHOTOS

பாரம்பரியமும் கலாச்சாரமும் நிறைந்த இந்தியாவில், ஏராளமான மக்கள் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்கின்றனர். நாடு முழுக்க உள்ள புனித யாத்திரை தலங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு அதிகளவிலான மக்கள் சென்ற கோயில்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க எங்கெல்லாம் போயிருக்கீங்க? SHARE.
News December 27, 2025
EPS-உடன் CM விவாதிக்க முடியாது: கனிமொழி

CM ஸ்டாலினுக்கு இருக்கும் வேலைப்பளுவில் EPS-உடன் விவாதிக்க முடியாது என MP கனிமொழி கூறியுள்ளார். நெல்லையில் பேசிய அவர், ஸ்டிக்கர் ஒட்டி பெருமை பெற்றவர் EPS, திமுகவில் இருக்கும் யாருடன் வேண்டுமானாலும் அவர் விவாதிக்கட்டும். அதையும் தாண்டி சில கேள்விகள் இருந்தால் அதற்கு CM பதிலளிப்பார் என்றார். முன்னதாக திமுக ஆட்சி பற்றி என்னோடு நேருக்கு நேர் விவாதம் நடத்த <<18685417>>தயாரா? என<<>> EPS சவால் விடுத்திருந்தார்.
News December 27, 2025
கணவரின் ஆணுறுப்பை அறுத்த மனைவி.. NEW UPDATE

கோவையில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி <<18678842>>கணவரின் ஆணுறுப்பை அறுத்த மனைவி<<>> கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் மது போதையில் பிரதான் இருந்தபோது, அவரது மனைவி ஜிந்தி இந்த கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளார். பிரதான் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தலைமறைவான ஜிந்தி தற்போது போலீசில் சிக்கியுள்ளார். அசாமைச் சேர்ந்த இந்த தம்பதி கோவையில் தங்கி பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.


