News April 11, 2025
ரேஷன் கார்டில் திருத்தும் செய்யணுமா?

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
Similar News
News February 23, 2026
திருவாரூர்: வங்கியில் வேலை – கடைசி வாய்ப்பு!

அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB) காலியாக உள்ள (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5138
3. சம்பளம்: ரூ.12,300 – 15,000
4. கல்வித் தகுதி: டிகிரி போதும்
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 23, 2026
திருவாரூர்: இளம் பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது

வலங்கைமானை சேர்ந்த பரணிதரன் (22), இவர் 22 வயதான பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்த நிலையில், அந்த பெண் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பரணிதரனிடம் கூறியதும், பரணிதரன் பெண்ணை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நன்னிலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பரணிதரன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
News February 23, 2026
திருவாரூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷன்கார்டுதாரர்கள் கார்டில் பெயர் இடம் பெற்று இப்போது வரை விரல் ரேகை பதிவு செய்யாத உறுப்பினர்கள், உடனடியாக தங்கள் பகுதி ரேஷன் கடைகளுக்கு சென்று விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். மேலும் வெளி மாவட்டத்தில் உள்ளோர் தாங்கள் வசிக்கும் பகுதியில் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


