News August 4, 2024
ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டத்தில் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 415286 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News December 5, 2025
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளின் கவனத்திற்கு

சிவகங்கை: மானாமதுரை, காரைக்குடி வழியாக இயங்கும் வண்டி எண். 16751 சென்னை எழும்பூர்-இராமேஸ்வரம் விரைவு வண்டி (Boat Mail), மற்றும் வண்டி எண்.22661 எழும்பூர்-இராமேஸ்வரம் சேது அதிவிரைவு வண்டி ஆகியவை தற்காலிகமாக நாளை முதல், டிசம்-15 வரை தாம்பரம் வரை இயங்கும், எழும்பூர் செல்லாது. சிவகங்கை மாவட்ட பயணிகள் இதற்கு தகுந்தமாதிரி பயணத்தை அமைத்து கொள்ளலாம் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
News December 5, 2025
சிவகங்கை: சிறுமிக்கு பாலியல் தொல்லை; 20 ஆண்டுகள் சிறை

மதுரையை சேர்ந்த கட்டிட தொழிலாளி குமார் (எ) ராஜ்குமார் (35),மானாமதுரை சேர்ந்த 17வயது சிறுமியை கடத்தி சென்று கொடைக்கானலில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 3 நாட்களுக்கு பிறகு போலீசார் சிறுமியை மீட்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றவாளி குமார் (எ) ராஜ்குமாருக்கு 20ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ₹3,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்
News December 5, 2025
சிவகங்கையில் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் நகரின் அரண்மனை வாசல் பகுதியில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திராவிடர் கழக சிவகங்கை மாவட்டக் காப்பாளர் மூத்த வழக்கறிஞர் இன்பலாதன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் பெ. ரு.இராசாராம் முன்னிலையிலும் நடைபெற்றது…
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புகழேந்தி அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்…


