News November 11, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. அரசு அறிவிப்பு

பொங்கல் பரிசு வழங்கும் பணியை அரசு இப்போதே தொடங்கிவிட்டது. இன்னும் 4 நாள்களில்(நவ.15 முதல்) ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை விநியோகம் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்த பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகம் நடைபெற உள்ளது. மேலும், பச்சரிசி, வெல்லம், கரும்பு, பரிசுத் தொகை உள்ளிட்டவை வழங்குவது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம்.
Similar News
News November 11, 2025
ஓடும் ரெயிலில் தவறி விழுந்து வாலிபர் பலி

வாணியம்பாடி அடுத்த வளத்தூர் ரெயில் நிலையம் யார்டில் இன்று (நவ.11) சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிப்பட்டு தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 11, 2025
பொங்கல் விடுமுறை.. 8 நாள்கள் அறிவிப்பு வெளியானது

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையை, பொங்கல் விடுமுறையையொட்டி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 11-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை(நவ.12) தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு நாளாக கணக்கிட்டு நவ.19-ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும். SHARE IT
News November 11, 2025
ஓய்வு முடிவை அறிவித்தார் ரொனால்டோ

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்னும் 1 அல்லது 2 ஆண்டுகளில் ஓய்வு பெறுவேன் என்று தெரிவித்துள்ளார். 2026 உலகக் கோப்பையில் விளையாட திட்டமிட்டுள்ள அவர், அப்போது தனக்கு 41 வயதாகி இருக்கும் என்றும், ஓய்வு பெறுவதற்கு அதுவே சரியான தருணம் எனவும் பேசியுள்ளார். அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு போர்ச்சுகல் அணி இதுவரை தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


