News June 2, 2024
ரேஷன் அரிசி கடத்தி 2 பேர் கைது

தாராபுரம் அலங்கியம் சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சீத்தக்காடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்திய இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News August 15, 2025
திருப்பூர் சுதந்திர தின கொண்டாட்டம்

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், முதல்வர் மனோன்மணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
News August 15, 2025
திருப்பூரில் சுதந்திர தின விழா; கலெக்டர் கொடியேற்றி வைத்தார்

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கல்லூரியில் இன்று காலை சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மணிஷ் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் சமாதான புறா பறக்க விடப்பட்டது. தொடர்ந்து 68 பயனாளிகளுக்கு ரூ.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
News August 15, 2025
திருப்பூர்: பஸ்ஸில் லக்கேஜை மறந்தால் என்ன செய்வது?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.(ஷேர் பண்ணுங்க)