News May 5, 2024
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் – பவானி சாலை, கல்பாவி பிரிவு பகுதியில் ரேசன் அரிசி கடத்தி செல்வதாக ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் வாகன அங்கு தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காரில் 11 மூட்டைகளில் 550 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்த உதயகுமார் (55) என்பவரை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 15, 2025
ஈரோடு அருகே லேப்டாப் திருடிய நண்டு கைது

ஈரோடு, கருங்கல் பாளையம் காவிரி சாலையில், இ-சேவை மையம் உள்ளது. இம்மையத்தில் இருந்த லேப்டாப் திருட்டு போனது தெரியவந்தது. மைய உரிமையாளர் புகாரின்படி கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, சிசி டிவி’ கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் சேலம், ஆண் டிபட்டி, அண்ணா நகர் சண்முகம் மகன் அய்யனார் (எ) நண்டு, 19, என்பவரை கைது செய்தனர். இவர் மீது சேலத்தில் பல வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
News December 15, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


