News May 2, 2024

ரேஷன் அரிசி கடத்தலை தெரிவிக்க செல்போன் எண் வெளியீடு

image

குமரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படாமல் தடுக்க புகார், தகவலை பொதுமக்கள் தெரிவிக்க செல்போன் எண்களை தமிழ்நாடு குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை வெளியிட்டது. துறையை 18005995950 என்ற எண்ணிலும், திருநெல்வேலி சரக டிஎஸ்பியை 8300070283, குமரி மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை 9498120504, சப்- இன்ஸ்பெக்டரை 9498122246, 9498133960 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

Similar News

News August 21, 2025

குமரி: 2833 காவலர் பணியிடம் அறிவிப்பு!

image

தமிழ்நாடு காவல்துறையில் 2833 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நாளை(ஆக.22) முதல் செப்.21ம் தேதி வரை <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு நவ.9-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 21, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட. 21) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.64 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.10 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.56 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.66 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 623 கன அடி, பெருஞ்சாணிக்கு 217 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

News August 21, 2025

குமரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்!

image

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை (22.08.2025) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் குமரியைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பை பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!