News April 24, 2024
ரேஷன் அரிசியில் எலியின் எச்சம்: மக்கள் அச்சம்

கூடலூர் அருகே உள்ள பந்தலூரில் அமைந்துள்ள நியாயவிலை கடையில் வழங்கப்பட்ட அரிசியில் எலியின் எச்சம், சணல் கயிறு, கான்கிரீட் கற்கள் இருப்பதை கண்டு பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டபோது, ஊழியர்கள் மிகவும் அலட்சியமாக பதில் கூறுவதாக பயனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அரசு சம்பந்தப்பட்ட துறையை கண்காணித்து தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News December 28, 2025
நீலகிரி: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 28, 2025
பந்தலூரில் அதிகரிக்கும் நோய் தாக்குதல்!

நீலகிரிமாவட்டம் பந்தலூர் பகுதியில் மழைக்காலத்தில் பெய்த மழையில் விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு உரமிடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக உறைபனியானது பெய்து வருகிறது.ஏற்கனவே உறைபனி தாக்குதலால் தேயிலை செடிகள் கருகி வரும் நிலையில் கொப்புள நொயும் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
News December 28, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

ஊட்டியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி,நகர்புற நல்வாழ்வு மையம்,சித்தா ஆகிய இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்படுகின்றன.இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.nilgiris.nic.in என்ற இணையத்தளபக்கத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து (6/1/26) மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், ஜெயில்ஹில் ரோடு, ஊட்டி என்ற முகவரியில் சமர்ப்பிக்குமாறு கலெக்டர் அறிவித்துள்ளார். SHARE IT


