News January 31, 2025

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டம் முழுவதும் கள்ளச் சந்தையில் தமிழக அரசு வழங்கும் ரேஷன் அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்துவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ரேஷன் அரிசியை விற்பனை செய்யும் குடும்ப அட்டைதாரர்களை பண்டங்கள் இல்லா அட்டைகளாக மாற்றப்படும் என்று ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 2, 2026

திருப்பத்தூர்: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

image

ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் ஜோலார்பேட்டையில் இருந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பால்னாங்குப்பம் கூட்டு ரோடு அருகே பின்னால் வந்த கார் சைக்கிள் மீது மோதியதில் முதியவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று (மார்.1) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 2, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

திருப்பத்தூர் : அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!