News January 13, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு புதிய அறிவிப்பு

தமிழகத்தில் ஒரு சிலருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் சிரமம் இருந்தது. குறிப்பாக, ரேஷன் கடைகளில் முதியவர்களின் விரல் ரேகை பதிவு செய்யும் போது, ஒப்புதல் பெற தாமதம் ஏற்படுவதால், அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, விரல் ரேகை சரிபார்ப்பில் பாதிப்பு ஏற்பட்டால், கண் கருவிழி ரேகை கருவியை பயன்படுத்தி, பொங்கல் தொகுப்பு வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News February 12, 2026
புதிய கட்சி முடிவில் அண்ணாமலை: சபாபதி மோகன்

தேர்தலுக்குள் அண்ணாமலை புதிய கட்சியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சபாபதி மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தன்னை மேலும் பிரபலப்படுத்தவே அண்ணாமலை அடிக்கடி தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுப்பதாகவும், பாஜகவில் அவரது நாள்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஏற்கெனவே இந்த பேச்சு எழுந்தபோது, அப்படி ஒரு திட்டம் இல்லை என அண்ணாமலை கூறியிருந்தார்.
News February 12, 2026
260 பேர் பலியான விமான விபத்து.. இதுதான் காரணமா?

2025-ல் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானம் விபத்தை அதனை இயக்கிய பைலட் செய்திருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. முன்னதாக இதை விசாரித்த புலனாய்வு பிரிவு, தொழில்நுட்ப கோளாறால் இது நடந்திருக்கலாம் என கணித்தது. ஆனால் தற்போது பிளாக் பாக்ஸை ஆய்வு செய்தபிறகு, மன அழுத்தத்தில் இருந்த கேப்டன் சுமீத் விமானத்தின் எரிபொருளை நிறுத்தியிருக்கலாம் என தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.
News February 12, 2026
ரூபாய் நோட்டுகளில் ஏன் இந்த கோடுகள் உள்ளன தெரியுமா?

இந்த கோடுகளை Bleed marks என்பார்கள். இவை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இவற்றை தொடுவதன் மூலம் நோட்டின் மதிப்பை அறிய முடியும். ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் வெவ்வேறு வகையான அடையாளங்கள் உள்ளன *₹100 நோட்டில் ஒவ்வொரு விளிம்பிலும் 4 கோடுகள் இருக்கும் *₹200 நோட்டில் 4 கோடுகளும், நடுவில் 2 சிறிய வட்டங்கள் இருக்கும் *₹500 நோட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் 5 சாய்ந்த கோடுகள் இருக்கும். SHARE IT.


