News October 31, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS

CM ஸ்டாலின் ஆகஸ்ட் 12-ல் தொடங்கி வைத்த ‘தாயுமானவர்’ திட்டம் நவம்பர் முதல் வாரத்தில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர். இனி, ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படும்.
Similar News
News October 31, 2025
பிரபல நடிகர் மரணம்… சகோதரி பரபரப்பு தகவல்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து, அவரின் சகோதரி ஸ்வேதா சிங் பரபரப்பான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். சுஷாந்தின் மரணம் தற்கொலையல்ல, அவரை 2 பேர் சேர்ந்து கொலை செய்ததாக அமானுஷ்ய ஆய்வாளர்கள் இருவர் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுஷாந்தின் படுக்கைக்கும் ஃபேனுக்கும் இடையே உள்ள தொலைவை வைத்துப் பார்க்கையில், அவர் தூக்கு போட்டுக்கொள்ள வாய்ப்பே இல்லை என்கிறார்.
News October 31, 2025
ORSL விற்பனைக்கு தமிழக அரசு தடை

ORSL, ORSL PLUS, ORS FIT ஆகிய கரைசலை விற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இவற்றை குடித்தால் நோயின் தன்மை மேலும் தீவிரமாகும் என FSSAI தடை விதித்திருந்த நிலையில், அதை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. உலக பொது சுகாதார அமைப்பு பெயர் அச்சிடப்பட்ட ORS-ஐ மட்டுமே விற்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ORSL கரைசலை மருந்தகம், கடைகளில் இருந்து பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 31, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக EPS அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகள் யாரும் செங்கோட்டையனுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் EPS அறிவுறுத்தியுள்ளார்.


