News August 7, 2025
ரூ.8,40,000 இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு

பெரம்பலூர் மாவட்டம் பில்லங்குளம் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஜெயராமன், தமிழ்செல்வி,செந்தில்வேலன், வேல்முருகன், அருள்மணி ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. கலைஞர் கனவு இல்லத்தில் வீடு கட்டியவர்கள் பெயரை இதில் சேர்த்து ரூ.8,40,000 முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 10, 2025
சாலை விபத்தில் ஒருவர் பலி; போலீஸ் விசாரணை

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் எழுத்தூர் சேர்ந்த மலையராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு பகுதியில் சாலை தடுப்பில் மோதி விழுந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே மலையராஜா பலியானார். இந்நிலையில் உடலை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News August 10, 2025
பெரம்பலூர்: ரூ.18,000 சம்பளத்தில் செவிலியர் வேலை!

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள Nurse, Pharmacist, Lab Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.8,500 – 18,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 10, 2025
பெரம்பலூர்: குடற்புழு நீக்கம் சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் (11.08.2025) அன்று நடைபெறவுள்ளது. மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு (18.08.2025) அன்று வழங்கப்படவுள்ளது. எனவே குடற்புழு மாத்திரைகளை மாணவர்கள் மற்றும் பெண்கள் உட்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.