News April 17, 2025

ரூ. 8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

image

நாகையை சேர்ந்தவர் அலெக்ஸ், இவர் மீது, ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகையில் இருந்து புதுக்கோட்டை வந்த அலெக்ஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போதை பொருளின் மதிப்பு ரூ.8 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது

Similar News

News January 6, 2026

நாகை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

நாகை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News January 6, 2026

நாகை: நாளை முதல் சிறப்பு முகாம் தொடக்கம்

image

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை பெற இணையவழி பதிவு செய்யும் முகாம் நாளை (ஜன.7) முதல் ஜன.31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு விடுமுறை நாள்கள் தவிா்த்து ஏனைய அனைத்து நாட்களிலும் இம்முகாம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்!

News January 6, 2026

நாகை: கடலில் தவறி விழுந்தவர் மாயம்

image

நாகை அக்கரைப்பேட்டை டாடா நகரை சேர்ந்த அறிவு (36) உள்பட 13 மீனவர்கள் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகில் இருந்த அறிவு கடலில் தவறி விழுந்து மாயமானார். தகவலறிந்த இந்திய கடற்படையினர் மாயமான மீனவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!