News April 17, 2025
ரூ. 8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

நாகையை சேர்ந்தவர் அலெக்ஸ், இவர் மீது, ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகையில் இருந்து புதுக்கோட்டை வந்த அலெக்ஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போதை பொருளின் மதிப்பு ரூ.8 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது
Similar News
News November 8, 2025
நாகூரில் கந்தூரி முன்னேற்பாடுகள் அமைச்சர்கள் ஆய்வு

புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 469வது கந்தூரி விழா வரும் நவம்பர் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருவார்கள் என்பதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் இணைந்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
News November 8, 2025
நாகை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
நாகையில் தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம்

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை(நவ.10) வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் பிரதான் மந்திரி தேசிய தொழிற் பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கைமுகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில், புகைப்படம், அனைத்து அசல் சான்றிதழுடன் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் அறிய 04365-250126 என்ற எண்ணை தொடர்பு கொள்ள ஆட்சியர் தெரிவித்தார்.


