News July 15, 2024

ரூ.70 லட்சம் கையாடல்: பெண்கள் புகார்

image

விழுப்புரம் மாவட்டம் சிறுவாக்கூர் கிராமத்தைச் சேர்ந்த சுய உதவிக் குழு பெண்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் தங்கள் பகுதியில் DRDA மூலம் அரசு வங்கி வழங்கிய ரூ.1 கோடியே 20 லட்சம் கடனை, 11 மகளிர் சுய உதவி குழு ஒன்றுக்கு தலா 5 லட்சம் வீதம் 55 லட்சம் பணம் மட்டும் வழங்கி, மீதமுள்ள 70 லட்சத்தினை PLF ஊழியர்கள் கையாடல் செய்து விட்டார்கள் என ஆட்சியரிடம் புகார் மனு வழங்கியுள்ளனர்.

Similar News

News August 25, 2025

விழுப்புரம்: ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்!

image

அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகள், சமூக வலைத்தளங்களில் வரும் ஆன்லைன் வர்த்தகம், கடன், கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு புதுப்பித்தல் போன்றவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பணம் இழந்தால் 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணிற்கு அழைத்து அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News August 25, 2025

தெரு நாய்களை பிடிக்கும் பணி துவக்கம்

image

திண்டிவனம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் அதிக அளவில் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்கள் சுற்றி வருவது பொது மக்கள் மத்தியில் அச்சுறுத்துலை ஏற்படுத்தி வந்தது.இதை தொடர்ந்து நகராட்சி சார்பில் அதே பகுதியில் தனியார் ஆட்கள் மூலம் தெரு நாய்களை வலைபோட்டு பிடிக்கும் நடவடிக்கை,சுகாதார அதிகாரி செந்தில் மேற்பார்வையில் நடந்தது. நேற்று மட்டும் 25 நாய்கள் பிடிக்கப்பட்டதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

News August 25, 2025

விழுப்புரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!