News June 14, 2024

ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை.

image

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டு சந்தையில் இன்று வாராந்திர ஆட்டு சந்தை நடைபெற்றது. வரும் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட அதிகளவிலான ஆடுகள் விற்பனையானது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கில் வியாபாரிகள், இஸ்லாமியர்கள் ஆடு வாங்குவதற்காக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று ஒரே நாளில் சுமார் 7 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News March 2, 2026

மதுரை இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

மதுரை: பூர்ணசந்திரன் குடும்பத்தினரை சந்தித்த மோடி

image

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, தற்கொலை செய்துகொண்ட பக்தர் பூர்ண சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துத் தனது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர், குடும்பச் சூழல் குறித்துக் கேட்டறிந்தார்.

News March 1, 2026

FLASH மதுரை: தனி விமானம் மூலம் டெல்லி புறபட்ட மோடி..!

image

மதுரையில் 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் மதுரையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியான பின் பிரதமர் மோடி பங்கேற்ற முதல் கூட்டணி மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!