News April 29, 2025

ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

image

வெளிப்பாளையம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் இதில் ஈடுபட்ட ரேவதி, பிரகாஷ் மற்றும் இவரது மனைவி ரேணுகா ஆகியோரை கைது செய்தனர்.

Similar News

News August 9, 2025

தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

நாகை அவுரி திடலில் பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிய தேர்தல் ஆணைய நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில், அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள். மேலும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News August 9, 2025

நாகை: மக்காசோள உற்பத்திக்கு மானிய தொகுப்பு

image

நாகை மாவட்டத்தில் மக்காசோளம் உற்பத்தியை பெருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்காசோள சாகுபடிக்கு வீரிய ஒட்டுரக விதைகள், திரவ உயிர் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை அடங்கிய ரூ.6000 மதிப்புள்ள தொகுப்பு வட்டார வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக நாகை வேளாண் இணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

நாகை: மக்காசோள உற்பத்திக்கு மானிய தொகுப்பு

image

நாகை மாவட்டத்தில் மக்காசோளம் உற்பத்தியை பெருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்காசோள சாகுபடிக்கு வீரிய ஒட்டுரக விதைகள், திரவ உயிர் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை அடங்கிய ரூ.6000 மதிப்புள்ள தொகுப்பு வட்டார வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக நாகை வேளாண் இணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!