News April 2, 2024
ரூ.5.8 லட்சம் நகைகள் திருட்டு: 2 போ் கைது

மதுராந்தகம் அடுத்த விழுதமங்கலம் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து 9 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று கே.நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்த நவீன்(25), வெங்கடேசன்(28) ஆகிய இருவரை கைது செய்து அவா்களிடமிருந்து 6 சவரன் தங்க நகைகளையும், 500 கிராம் வெள்ளி பொருள்களை மீட்டனர்.
Similar News
News August 15, 2025
தாம்பரம் மாநகராட்சியில் 19 அலுவலர்கள் பணியிட மாற்றம்

தாம்பரம் மாநகராட்சியில் பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, 5 மண்டலங்களில் பணியாற்றும் மேலாளர், கண்காணிப்பாளர்கள், நிர்வாக அலுவலர், உதவியாளர்கள், இளநிலை & வருவாய் உதவியாளர்கள், பதிவு எழுத்தர் உள்ளிட்ட 19 அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே முரளி மற்றும் ரமேஷ் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 15, 2025
நடுவானில் விமானத்தில் கோளாறு

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று (ஆக.14) 166 பயணிகளுடன் கோழிக்கோடு வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது இதையடுத்து அவசர அவசரமாக விமானம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நள்ளிரவு 12.10 மணியளவில் தரையிறக்கப்பட்டது. தற்போது விமானத்தின் கோளாறு சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மாலை விமானம் கோழிக்கோடு புறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
News August 15, 2025
ஞாயிறு அட்டவணைப்படி இன்று ரயில்கள் இயங்கும்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று (ஆகஸ்ட் 15) சென்னை மற்றும் செங்கல்பட்டு இடையே புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படுகின்றன. இதனால், வழக்கமான நாட்களை விட 40% ரயில்கள் குறைக்கப்பட்டிருக்கும். பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை இதற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.