News August 5, 2024
ரூ.42 லட்சம் கொள்ளை மர்ம கும்பல் கைவரிசை

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் ஆனந்த். காய்கறிகளை இறக்கிவிட்டு கரூர் திருச்சி புறவழிச்சாலை அருகே சென்றுள்ளார். அவருடன் காய்கறி பணம் வசூல் செய்பவர் லோகேஷ் வந்திருந்தார். கரூர் மாவட்டம குளித்தலை அருகே டீ குடிக்க லாரி நிறுத்தினார். அப்போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்து திடீரென்று லாரியில் ஏறி பெட்டியை உடைத்து காய்கறி வசூல் ரூ.42 லட்சத்தை எடுத்து சென்றனர்.
Similar News
News February 5, 2026
கரூர்: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

கரூர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் கரூர் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04324-255340 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News February 5, 2026
கரூர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்! APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<
News February 5, 2026
தோகைமலை அருகே தட்டி தூக்கிய போலீஸ்: இருவர் கைது

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்.டி மலை, கீழவெளியூர் கடைவீதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் லாட்டரி விற்ற வேலு 61, ராஜேந்திரன் 55 ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் ஏற்கனவே தலா 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


