News July 7, 2024
ரூ.3,727 கோடி கடன் இலக்கு நிர்ணயம்

நடப்பு நிதி ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை ஊட்டியில் கூடுதல் கலெக்டர் கவுசிக் நேற்று வெளியிட்டார். அதன்படி, மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டில், ரூ 3,727 கோடியே 83 லட்சம் என கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் விவசாயம் சார்ந்த தொழில்கள் துவங்க ரூ.3,091 கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இக்கூட்டத்தில் வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
Similar News
News December 31, 2025
BREAKING: ஊட்டி வந்தார் தமிழக ஆளுநர்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக ஊட்டி வந்துள்ளார். மேலும் நாளை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஊட்டி வந்த கவர்னரை ராஜ்பவன் மாளிகையில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வரவேற்றார்.
News December 31, 2025
நீலகிரி: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டா.. இத பண்ணுங்க

நீலகிரி மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எண் 0423-2443962 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். (SHARE பண்ணுங்க)
News December 31, 2025
பந்தலூர் அருகே விபத்து

பந்தலுார் பஜாரின் மையப்பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பம் மீது இவ்வழியாக வந்த லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அதில், மின்கம்பம் வளைந்தது. பெரிய அளவிலான விபத்து ஏதும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, லாரி உரிமையாளர் சார்பில் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


