News March 26, 2025

ரூ.30 கோடி செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

image

சட்டசபையில் நேற்று (மார்ச்.25) அமைச்சர் கே.என்.நேரு, தாம்பரம் மாநகராட்சியில் ரூ.30 கோடி செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், ரூ.750 கோடி செலவில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், நந்திவரம் – கூடுவாஞ்சேரி தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்துதல், செங்கல்பட்டு நகராட்சியில் புதிய பேருந்து நிலைய பணிகள், மறைமலைநகர் நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

Similar News

News September 29, 2025

செங்கல்பட்டில் 4,713 பேர் ஆப்சென்ட்!

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் 645 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் நேற்று (செப்.28), தமிழகம் முழுவதும் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில், மேற்கண்ட தேர்விற்கு 15,504 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 56 தேர்வு மையங்கள் மாவட்ட நிர்வாகம் அமைத்திருந்தது. இதில் 4,713 பேர் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 28, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டில் இன்று (செப்.28) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 28, 2025

செங்கல்பட்டு: IOB வங்கியில் வேலை

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, MBA, M.Sc, MCA, M.E/M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் Rs.64,820 முதல் Rs.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி 03.10.2025 ஆகும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!