News July 19, 2024
ரூ. 264.15 கோடியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.264.15 கோடியில் புதிய வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதில் 956 வகுப்பறைகளும், 12 ஆய்வக கட்டிடங்கள் மற்றும் புனரமைக்கப்பட்ட கட்டிடங்களும் அடங்கும். இத்துடன் முதன்மை கல்வி அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகமும் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயில புதிய வகுப்பறைகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
Similar News
News July 8, 2025
களம்பூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் களம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் உதவி ஆய்வாளர் குபேந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நேற்று முன்தினம் வாகன விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 07/07/2025 அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News July 7, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News July 7, 2025
தி.மலை: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

தி.மலை மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <