News July 6, 2024

ரூ.206 லட்சம் கடனுதவி வழங்கினார் ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று தொழில் முனைவோருக்கான கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், புதிய தொழில் முனைவோர், அண்ணல் அம்பேத்கர் சாம்பியன்ஸ் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தேர்வான 50 பேருக்கு ரூ.206 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

Similar News

News August 5, 2025

செங்கல்பட்டு மாவட்ட குறுவட்ட தடகள போட்டிகள்

image

செங்கல்பட்டு குறுவட்ட தடகளப் போட்டி இன்று எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. குறுவட்ட தடகள போட்டிகளில் 34 பள்ளிகள் 680 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.

News August 5, 2025

ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

image

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ரயில்கள் தற்போது மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் ரயில், எழும்பூர்- புதுச்சேரி மெமு விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.

News August 5, 2025

செங்கல்பட்டு: பாலாற்றின் நடுவே அழகிய தீவு

image

செங்கல்பட்டு பரமேஸ்வரமங்கலத்தில் உள்ளது கைலாசநாதர் கோயில். பாலாற்றின் நடுவே அமைந்துள்ள இந்த கோயில் பார்ப்பதற்கு சிறிய தீவு போல காட்சி அளிக்கிறது. மூலவராக கைலாச நாதரும், கனகாம்பிகையும் உள்ள நிலையில், தீவு போன்ற இந்த கோயிலின் அமைப்பு அமைதி தரும் வகையில் உள்ளது. இங்கு வழிபட்டால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!