News February 16, 2025
ரூ.2.23 லட்சத்திற்கு புத்தகம் விற்பனை: கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் சாலை வி.எம் திடலில் 3வது கல்லை புத்தகத் திருவிழா நேற்று முன்தினம் பிப்ரவரி 14-ம் தேதி துவங்கியது. பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாள் விழாவில், மொத்தம் 20,075 பேர் கண்டுகளித்தனர். 2 லட்சத்து 23 ஆயிரத்து 594 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 14, 2025
கள்ளக்குறிச்சி: அரசு திட்டம் கிடைக்கவில்லையா..? இதை பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், இந்த <
News October 14, 2025
கள்ளக்குறிச்சி: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

கள்ளக்குறிச்சி மக்களே, அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் (04151-222190) புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 14, 2025
கள்ளக்குறிச்சி: ஆற்றில் மூழ்கிய சிறுவன்.. ரூ.3 லட்சம் நிவாரணம்!

திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த 16 வயது சிறுவன் எத்திராஜ், ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோயில் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இவர் ஆவியூரில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.