News November 22, 2025
ரூ.15,000 பரிசு: கோவையில் VIRAL POSTER

கோவை கணபதி பகுதியை சேர்ந்த கதிர் குடும்பம் வளர்த்து வந்த வெள்ளை நிற கிராக்டேயில் “மியா” கிளி வகையைச் சேர்ந்த பறவை கடந்த அக்டோபர் 29-ல் பறந்துச் சென்றது. இதையடுத்து குடும்பத்தினர் கோவையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.15,000 பரிசு வழங்கப்படும் என்றும், அதை “மியா” அல்லது “PEEK-A-BOO” என்று அழைத்தால் வந்து விடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 13, 2026
கோவையில் போலீஸ் குவிப்பு!

கோவையில் 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். இத்துயரச் சம்பவத்தின் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை (பிப்.14) நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (பிப்.13) முதல் கோவை மாநகரம் முழுவதும் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
News February 13, 2026
கோயம்புத்தூரில் 2 நாள்கள் தடை

கோவையில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் சேர்த்து சிங்காநல்லூர், சின்னியம்பாளையம், நேருநகர், பீளமேடு, லட்சுமி மில்ஸ், இராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், சாய்பாபா காலனி, வடவள்ளி (ம) அதன் சுற்றுவட்டார பகுதிகள் தற்காலிகமாக REDZONE ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று (பிப்.13) 9 மணி முதல் (பிப்.15) 9 மணி வரை ஆளில்லா விமானம் (ம) ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
News February 13, 2026
நுரையீரல் நோய் காரணமாக தற்கொலை

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (65). இவர் கடந்த சில மாதங்களாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


