News April 26, 2025
ரூ. 15 ஆயிரம் லஞ்சம் நகராட்சி வருவாய் உதவியாளர் கைது

தென்காசி, சிவகிரி அருகே வடுகப்பட்டி, தெற்குசத்திரத்தை சேர்ந்தவர் காளிராஜன் 36. இவர் புளியங்குடியில் நிலம் வாங்கி வீடு கட்டினார். அதற்கு வரி நிர்ணயிப்பதற்காக நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமரை அணுகினார்.அவர் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டார். தர விருப்பமில்லாத காளிராஜன் ,தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அகமது உமரை கைது செய்தனர்.
Similar News
News April 26, 2025
தென்காசியில் கால்நடை தடுப்பூசி முகாம் ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்தடுப்பு திட்டத்தின்கீழ் இரண்டாவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசிப் பணி 2025 28.04.2025 முதல் 27.05.2025 வரை நடைபெறவுள்ளது. கால்நடை வளர்ப்போர் இத்தருணத்தை பயன்படுத்தி எவ்வித விடுபாடுமின்றி தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE செய்யவும்.
News April 25, 2025
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று ஏப்.25 இரவு தென்காசி, , புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.