News April 26, 2025

ரூ. 15 ஆயிரம் லஞ்சம் நகராட்சி வருவாய் உதவியாளர் கைது

image

தென்காசி, சிவகிரி அருகே வடுகப்பட்டி, தெற்குசத்திரத்தை சேர்ந்தவர் காளிராஜன் 36. இவர் புளியங்குடியில் நிலம் வாங்கி வீடு கட்டினார். அதற்கு வரி நிர்ணயிப்பதற்காக நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமரை அணுகினார்.அவர் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டார். தர விருப்பமில்லாத காளிராஜன் ,தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அகமது உமரை கைது செய்தனர்.

Similar News

News September 28, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (27-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

News September 27, 2025

தென்காசி எம்‌.பி-க்கு வாழ்த்து தெரிவித்த திமுக நிர்வாகிகள்

image

2026 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் திமுக தேர்தல் பொறுப்பாளராக தென்காசி எம்.பி., டாக்டர். ராணி ஸ்ரீகுமார்-ஐ நியமனம் செய்யபட்டு உள்ளார். இன்று மாநில வர்த்தக அணி நிர்வாகி, முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி தலைமையில் விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகி கேபிள் கணேசன் உள்ளிட்ட திமுகவினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

News September 27, 2025

தென்காசி மக்களே உங்க பகுதில குடிநீர் வருதா??

image

தென்காசி மாவட்டத்தில் 13521 குடிநீர் இணைப்புகள் கொடுக்கபட்டு குடிநீர் 2 -3 நாட்கள் ஒரு முறை வழங்கபட்டு வருகிறது. புதிய வீடுகளுக்கு – ரூ.6000 இணைப்பு வழங்கபடுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் குடிநீர் வராமல் இருந்தாலோ (அ) குடிநீர்க்கு அதிக கட்டணங்கள் வசூலித்தாலோ தென்காசி நகராட்சி ஆணையரிடம் 04633-222228 தெரியபடுத்துங்கள். தெரியாதவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!