News October 20, 2025
ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

மேலுாரில் தீபாவளியை முன்னிட்டு நேற்று சிறப்பு சந்தை நடந்தது. மேலுார் தாலுகாவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். நேற்று நடந்த சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News October 20, 2025
மதுரையில் சிறுமி கர்ப்பம்-சிறுவன் கைது

மதுரை கள்ளிக்குடி அரசபட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் தன்னுடன் பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.சிறுமி கர்பமடைந்துள்ளார். தகவல் அறிந்த ஊர் நல அலுவலர் ஆவுடையம்மாள் புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் 17 வயது சிறுவனையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனர்.
News October 20, 2025
மதுரை: கரண்ட் கட்டா? கவலை வேண்டாம்

மதுரை மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 20, 2025
தோப்பூரில் தூங்கிய பெண்ணிடம் நகை திருட்டு

மதுரை திருமங்கலம் அருகே தோப்பூரைச் சேர்ந்த சோனை முத்து 47 நேற்று முன்தினம் இவரது வீட்டில் அனைவரும் தூங்கினர். காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய மகள் ஆஷிகா 19 அணிந்திருந்த 2.5 பவுன் நகை வீட்டில் இருந்த அலைபேசியை மர்ம நபர் திருடி தப்ப முடியன்றார், சத்தம் கேட்டு எழுந்து வீட்டினர் மர்ம நபரை விரட்டிய போது அவர் தப்பினார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.