News December 31, 2025

ரூ.1 லட்சம் பரிசு: நாகை ஆட்சியர் அறிவிப்பு!

image

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் சிறப்பான பங்களிப்பு வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர்கள் விருது வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜன.20 ஆம் தேதி ஆகும். இதில், ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். இதற்கு <>tnpcp.gov.in<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க!

Similar News

News January 1, 2026

நாகை: 508 கிலோ கஞ்சா பறிமுதல்

image

நாகை மாவட்டத்தில் கஞ்சா போதைப் பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, 78 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 129 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 508 கிலோ கஞ்சா (மதிப்பு ரூ.50,85,600/-) மற்றும் 08 நான்கு சக்கர வாகனங்கள், 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 1, 2026

நாகை: 46 பேர் குண்டர் சட்டத்தில் அதிரடி கைது

image

நாகை மாவட்டத்தில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் கொலை மற்றும் இதர வழக்குகளில் 34 பேரும், தொடர் மது கடத்தலில் ஈடுபட்ட 12 பேர் என நாகை மாவட்டத்தில் மொத்தம் 46 பேர் ஒரே ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

News January 1, 2026

நாகை மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

image

நாகை மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்!. கடந்த 2025-ஆம் ஆண்டில் நாகைக்கு வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!

error: Content is protected !!