News October 7, 2025

ராம்நாட்டில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

திருவாடானை, பெருங்குளம் மற்றும் ஏர்வாடி துணைமின் நிலையங்களில் இன்று (அக்.07) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் பெருங்குளம், உச்சிப்புளி, இருமேனி, பிரப்பன்வலசை, அரியமான் பீச், புதுமடம், வாலாந்தரவை மற்றும் பனையடியேந்தல், நல்லிருக்கை, ஆலங்குளம், மல்லல், மட்டியரேந்தல் சுற்றுவட்டாரத்தில் காலை 09:00 மணியில் இருந்து மாலை 05:00 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Similar News

News October 7, 2025

ராம்நாடு: 10th போதும்; அரசுப் பள்ளியில் சூப்பர் வேலை.!

image

மத்திய அரசின் Ministry of Tribal Affairs கீழ் செயல்படும் (EMRS) பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளுக்காக மொத்தம் 7,267 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10-ம் வகுப்பு முதல் B.ED வரை படித்த விண்ணப்பதாரர்கள் இங்கே கி<>ளி<<>>க் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதிகேற்ப 18,000 முதல் 2,00,000 வரை சம்பளம் வழங்கப்படும் அக்.23 கடைசி நாள் SHARE IT.!

News October 7, 2025

ராம்நாடு: குறுக்கே மாடு பாய்ந்து பைக்கில் சென்றவர் பலி.!

image

திருவாடானை காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணன் 35. இவர் பண்ணவயலிலிருந்து தொண்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அச்சங்குடி அருகே மாடு குறுக்கே சென்றதால், நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கு ராஜேஸ்கண்ணன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 7, 2025

ராமேஸ்வரத்தில் டூம்ஸ்டே மீன்; சுனாமி அபாயம்.?

image

ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர் வலையில் நேற்று, அரிய மீன் இனமான 5 அடி நீளமுள்ள டூம்ஸ்டே மீன் சிக்கியது. ஆழ்கடலில் வாழும் இம்மீன் கடல் மேற்பரப்பில் வந்த சமயத்தில் பாம்பன் மீனவர் வலையில் சிக்கி உள்ளது. ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளின்படி, இந்த மீன்கள் கரை ஒதுங்கினால் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என கூறுவதாக, மீன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!