News March 20, 2026
ராம்நாடு: 10 மீனவர்களின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

கடந்த பிப்.19-ல் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 10 பேரை இலங்கை அரசு கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது. வாய்தா நாளான நேற்று, 10 மீனவர்களை வளைகுடா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதில் மண்டபம் மீனவர்களுக்கு ஏப்.2-வரை எனவும், இராமேஸ்வரம் மீனவர்களுக்கு மார்ச் 26 வரை காவல் நீடிப்பு என உத்தரவிட்டு மீண்டும் வவுனியா சிறையில் அடைத்தனர்.
Similar News
News April 7, 2026
இராம்நாடு: ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்.? அதிர்ச்சி..

ராமநாதபுரம், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த பிரபு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்கள் வீட்டின் அருகில் இருந்த முஸ்லீம் ஜமாத்துக்கு சொந்தமான இடத்தை கிராம நிர்வாகிகள் சிலர் ஆக்கிரமித்தனர். இது ஜமாத்துக்கு சொந்தமான இடம் தான் என தாங்கள் தெரிவித்ததால், எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர் என கூறியிருந்தார். விரிவான விசாரணைக்காக ஏப்.9 க்கு வழக்கு ஒத்திவைப்பு.
News April 7, 2026
இராம்நாடு: ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்.? அதிர்ச்சி..

ராமநாதபுரம், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த பிரபு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்கள் வீட்டின் அருகில் இருந்த முஸ்லீம் ஜமாத்துக்கு சொந்தமான இடத்தை கிராம நிர்வாகிகள் சிலர் ஆக்கிரமித்தனர். இது ஜமாத்துக்கு சொந்தமான இடம் தான் என தாங்கள் தெரிவித்ததால், எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர் என கூறியிருந்தார். விரிவான விசாரணைக்காக ஏப்.9 க்கு வழக்கு ஒத்திவைப்பு.
News April 7, 2026
இராம்நாடு: நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து.!

தொண்டி மகாசக்திபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சக்தி பாண்டி (37), உத்தமராஜன் (19). இவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், திடீரென கடலில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் மீனவர்கள் சக்தி பாண்டி, உத்தம ராஜன் சென்ற படகு காற்றின் வேகத்தில் கவிழ்ந்தது. நடுக்கடலில் தத்தளித்த 2 மீனவர்களையும் அந்த வழியாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பார்த்து தங்கள் படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனர்.


