News June 28, 2024
ராம்நாடு: விவசாயி மகனுக்கு எஸ்பி பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே குயவனேந்தலைச் சேர்ந்த விவசாயி கருப்பையா என்பவரது மகன் கேசவன் (23) இயற்பியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற கேசவன் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சிபெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வானார். இவர் தனது தந்தையுடன் ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷை சந்தித்து நேற்று வாழ்த்து பெற்றார். குயவனேந்தல் கிராமத்திற்கு பெருமை சேர்த்த கேசவனுக்கு பாராட்டு குவிகிறது.
Similar News
News September 11, 2025
ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு இலவச ஆன்மீக பயணம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலிலிருந்து காசி விசுவநாதர் ஆலயத்திற்கு இந்தாண்டு 1.50 கோடி செலவில் அரசு நிதியில் ஆன்மீக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 600 பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும், இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இதில் பங்கேற்க 1800 425 1757 இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 11, 2025
ராமநாதபுர இளைஞர்களே போலீசில் சேர ஆசையா..!

தமிழகத்தில் காலியாக உள்ள 2ம் நிலை காவலர், சிறைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் 3665 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வினை எழுத ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சியை பெற நேரிலோ அல்லது
0456-7230160 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் வெளியிட்டுள்ளார்.
News September 11, 2025
பரமக்குடியில் வீடுகளில் புகுந்த மழை நீர்

பரமக்குடி நகராட்சி 12வது வார்டு ஜி.வி.பந்த் தெருவில் முறையற்ற வாறுகால் காரணமாக கனமழையில் 10க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வீடுகளுக்குள் மழை, கழிவுநீர் புகுந்து தொழில் பாதிப்பு ஏற்பட்டது. முன்னர் வாறுகால் சீரமைப்பு, திட்ட மதிப்பீடு செய்யப்பட்டதாக நகராட்சி பதிலளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மனு அனுப்பினர். நகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.