News March 19, 2024
ராம்நாடு: விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா தலைமையில் சுவர் விளம்பரங்கள் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
Similar News
News April 6, 2025
உத்தரகோசமங்கை கும்பாபிஷேக விழாவில் 42 பவுன் திருட்டு

உத்தரகோசமங்கையில் மங்களநாத சுவாமி சமேத மங்களநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. கோயிலில் நான்கு ரத வீதிகள் மற்றும் தரிசனத்திற்காக நின்ற கோவை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 8 பெண்களிடம் கொள்ளையர்கள் 42 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.கழுத்தில் இருந்த செயின் திருடு போனதை அறிந்து பெண்கள் போலீஸ் ஸ்டேஷனில் வரிசையாக புகார் அளித்தனர்.
News April 5, 2025
பாம்பன் திறப்பு – பிரதமர் ட்வீட்

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நாளை ஏப்.6ஆம் தேதி ராம நவமி நாளில் தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ.8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் அடிக்கல் நாட்டப்படும்” என பதிவிட்டுள்ளார்.
News April 5, 2025
ராமேஸ்வரத்திற்கு நாளை முதல் தினசரி விரைவு ரயில் இயக்கம்

ராமநாதபுரத்திற்கு நாளை (ஏப்ரல்.06) முதல் சென்னை தாம்பரத்திலிருந்து பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்துக்கு 16103/04 TBM RMM தினசரி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து தினசரி மாலை 6.10 மணிக்கு புறப்படும். ராமேஸ்வரத்திலிருந்து தினசரி மாலை 4 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே தென் மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.