News November 5, 2025
ராம்நாடு: வியக்க வைத்த 8ம் வகுப்பு மாணவனின் நேர்மை

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த பானுமதி தனது கட்டப்பையில் வைத்திருந்த மணி பரிசில் ரெண்டு கிராம் அளவுள்ள தோடு ஒரு கிராம் குண்டுமணி ஒரு ஜோடி கொலுசு ரூபாய் 3000 ரொக்கம் பையோடு தவறவிட்டார். அந்தப் பையை கண்டெடுத்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் கபிலேஷ் திருமுருகன் போலீசாரிடம் ஒப்படைத்தார். அவருக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தி கௌரவித்தனர்.
Similar News
News November 5, 2025
ராம்நாடு: டிப்ளமோ போதும்; CHENNAI METRO வில் வேலை.!

ராம்நாடு மக்களே, சென்னை மெட்ரோவில் Supervisor மற்றும் Technician பணியிடங்களுக்கு ஏராளமான காலியிடங்கள் உள்ளன. ITI மற்றும் DIPLOMA முடித்தவர்கள் இந்த லிங்கை<
News November 5, 2025
ராம்நாடு: இரு சக்கர வாகன பழுது நீக்குதல் இலவச பயிற்சி

இராமநாதபுரம் சிகில் ராஜ வீதி சாந்த் பீவி காம்ப்ளக்ஸ் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனம் நடத்தும் இருசக்கர வாகனப் பழுது நீக்குதல் பயிற்சி இலவசமாக நடைப்பெற உள்ளது. பயிற்சி ஆரம்பிக்கும் நாள் (நவ -12) பயிற்சி நாட்கள் 30.நேரம்:காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை. பயிற்சி நடைப்பெறும் இடம்: பூமாலை வணிக வளாகம், புது பஸ்ஸ்டாண்ட் அருகில் தொடர்புக்கு: 8825954443.
News November 5, 2025
இராம்நாடு: லஞ்சம் வாங்கிய 3 அதிகாரிகள் கூண்டோடு கைது

பரமக்குடியைச் சேர்ந்த அரசு பதிவு ஒப்பந்ததாரர், ராமநாதபுரம் DRDA சார்பில் டெண்டர் எடுத்த தார் ரோடு வேலை முடித்த தொகையை விடுவிக்கக்கோரி ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவு துணை வளர்ச்சி அலுவலர் வீரசேகரனை (அக்.24) அணுகினார். தொகையை விடுவிக்க ரூ.1.20 லட்சம் வீரசேகரன் கேட்டார். இந்த தொகையை வீரசேகரன், நாகலிங்கம், அருண் ஆகியோர் வாங்கியபோது ராமநாதபுரம் ஊழல் தடுப்பு போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்..


