News April 6, 2024
ராம்நாடு: முட்புதருக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்

திருவாடானை தாலுகா எஸ்பி பட்டினம் அருகே உள்ள சோழகன்பேட்டை கிராமத்தில் ஓரியூர் செல்லும் சாலையில் உள்ள முனியய்யா கோவில் பகுதியில் முட்புதருக்குள் துர்நாற்றம் வீசி உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று (ஏப்.5) அங்கு சென்று பார்த்தபோது அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டனர். தகவலறிந்த எஸ்பி பட்டினம் போலீசார் அழுகிய சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
Similar News
News February 14, 2026
இராமநாதபுரம் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.ராமநாதபுரம்- 9445000363
2.ராமேஸ்வரம்- 9445000364
3.திருவாடானை- 9445000365
4.பரமக்குடி- 9445000366
5.முதுகுளத்தூர்- 9445000367
6.கடலாடி- 9445000368
7.கமுதி- 9445000369
*அலுவலக நேரத்தில் மட்டும் அழைக்கவும்* இந்த தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News February 14, 2026
இராமநாதபுரம்: கொலை குற்றவாளிகள் சரண்!

ராமநாதபுரம் கான்சாகிப் தெருவை சேர்ந்தவர் கமால் முஸ்தபா மகன் செய்யது அப்துல்லா(31). இவரை 2025 மே.17ம் தேதியன்று சிலர் காரில் கடத்திச் சென்று கொலை செய்தனர். இவ்வழக்கில் 5 பேர் கைதான நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை சி.பி.சி.ஐ.டி,க்கு மாற்றியது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 6 பேரில் இருவர் சரணடைந்தனர். மேலும் இருவர் நேற்று சரணடைந்தனர்.
News February 14, 2026
இராம்நாடு: சிறுமிக்கு பாலியல் தொல்லை; 20 ஆண்டுகள் சிறை

திம்மநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு கடந்த 2023ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த செல்வ பெருமாள் பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு கமுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்தது. இந்நிலையில் பாலியல் தொல்லை அளித்த இளைஞர் செல்வபெருமாளுக்கு 20 வருடம் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நேற்று நீதிபதி கவிதா உத்தரவிட்டார்.


