News June 14, 2024
ராம்நாடு: மாணவர்கள் கவனத்திற்கு

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. காலியிடங்கள் உள்ளதால் இணைய வழியாக விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தற்போது நேரடியாக விண்ணப்பம் பெற்று சேரலாம். ஜூன் 19ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25.06.2024 அன்று நடைபெறும் என கல்லூரி முதல்வர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
இராம்நாடு: தவில், நாதஸ்வரம் பயிற்சி பள்ளி சேர்க்கை

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தொடங்கி நடத்தப்பட உள்ள தவில் நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இதில் 13 வயது முதல் 20 வயது வரை இப்பயிற்சி பள்ளியில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆண், பெண் என ஆகிய இருபாலரும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ஊக்கதொகையாக வழங்கப்படும்.
News September 11, 2025
ராமநாதபுரம்: பள்ளி வளாகத்தில் கிடந்த தொழிலாளி சடலம்

தொண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஹைதர்அலி 39. சுமை துாக்கும் தொழிலாளி. அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை உள்ளது.2 மாடி கொண்ட அந்த கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு ஹைதர்அலி கீழே விழுந்தார். அவரது உடல் ரேஷன் கடை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிடந்தது.அதிகாலையில் அந்த பக்கமாக சென்ற சிலர் உடல் கிடப்பதை பார்த்து போலீசுக்கு தெரிவித்தனர்.
News September 11, 2025
ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு இலவச ஆன்மீக பயணம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலிலிருந்து காசி விசுவநாதர் ஆலயத்திற்கு இந்தாண்டு 1.50 கோடி செலவில் அரசு நிதியில் ஆன்மீக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 600 பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும், இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இதில் பங்கேற்க 1800 425 1757 இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.