News September 29, 2025
ராம்நாடு: மனைவியுடன் சண்டை., கணவன் தற்கொலை

ராமநாதபுரம் டி பிளாக் பகுதியை சேர்ந்த தம்பதியினர் எலக்ட்ரீசியன் பத்மநாபன் – வசந்தலெட்சுமி. அடிக்கடி இவர்களுக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 6 வருடங்களுக்கு முன் பத்மநாபன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரை காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில் பத்மநாபன் மீண்டும் செப்.27 விஷம் குடித்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 29, 2025
ராம்நாடு: இனிமே முழு கண்காணிப்பில்

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் குற்றச்சாட்டுகளை தடுக்கும் விதமாக SAFE RAMAND திட்டத்தின் கீழ் பரமக்குடி தாலுகா பெங்களூர் பகுதியில் 5 சிசிடிவி கேமராவும், அரியேனந்தல் பகுதியில் 4 சிசிடிவி கேமராவும், உரப்புளி பகுதியில் 2 சிசிடிவி கேமராவும், கமுதி செங்கப்படை பகுதியில் 3 சிசிடிவி கேமரா என மாவட்ட முழுவதும் மொத்தம் 3128 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
News September 29, 2025
ராம்நாடு: சாலை விபத்தில் பெண் பலி

ராமநாதபுரம் மாவட்டம் மறவர் கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் முருகன் அவரது மனைவி ஸ்ரீதேவி, டூவீலரில் மதுரை சென்று விட்டு ஊர் திரும்பிய வழியில், அருப்புக்கோட்டை அருகே நேற்றிரவு (28/9/25) பரளச்சி சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரளச்சி காவல்துறை அதிகாரி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகன் மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News September 29, 2025
ராம்நாடு: பத்திரபதிவு கட்டணம் LIST!

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <