News January 6, 2026

ராம்நாடு: பஸ் புக்கிங் செய்த போது ரூ.1 லட்சம் மோசடி

image

ஆன்லைனில் பேருந்து டிக்கெட் புக் செய்த போது கூகுளில் தேடிய தவறான கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு ரூ.1 லட்சம் பணத்தை இழந்த அகமது அஸ்லாம் என்பவர் இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சைபர் கிரைம் காவல்துறையினர் விரைவாக விசாரணை மேற்கொண்டு முழு தொகையையும் மீட்டு இன்று காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS முன்னிலையில் உரிய நபரிடம் ஒப்படைத்தார்.

Similar News

News January 31, 2026

இராம்நாடு: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

image

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 31, 2026

பரமக்குடி: இன்று இங்கெல்லாம் பவர் கட்

image

பரமக்குடி துணைமின் நிலையத்தில் இன்று (ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பரமக்குடி நகர், நயினார்கோவில், சத்திரக் குடி, கமுதக்குடி, சிட்கோ பகுதி, எமனேசுவரம், மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பரமக்குடி நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

News January 30, 2026

இராம்நாடு: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04575-242561
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை ஐகோர்ட் : 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!