News September 18, 2025

ராம்நாடு: திமுக பிரமுகர் வீட்டில் கொள்ளை! விரைவில் விசாரணை!

image

ராமநாதபுரம் வாலாந்தரவை பகுதியை சேர்ந்தவர் திமுக பிரமுகர் பி.டி.ராஜா. இவரது வீட்டில் 2014ம் ஆண்டு மர்ம நபர்கள் வீடு புகுந்து அவரை கட்டிப்போட்டு ரூ.35 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை கொள்ளையடித்தனர். இந்த வழக்கில் 5 பேர் கைதான நிலையில், நேற்று சிபிசிஐடி போலீசார் குற்றப் பத்திரிகையை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்னர். இவ்வழக்கில் விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News September 18, 2025

பரமக்குடி நான்கு வழிச்சாலையில் பயங்கர விபத்து

image

பரமக்குடி அருகே‌ உள்ள வேந்தோணி நான்கு வழிச் சாலையில் இன்று (செப். 18) காலையில் மதுரையில் இருந்து வந்த டாடா மினி லாரியும், எதிரே வந்த மினி லாரியும் அங்குள்ள பேக்கரி அருகே மோதி விபத்து ஏற்பட்டது. இதில், மினி லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் அருகே நின்றிருந்த 3 கார்களும் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து பரமக்குடி‌ சரக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News September 18, 2025

ராமநாதபுரம் மக்களே., இத மிஸ் பண்ணிடாதீங்க!

image

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (செப். 19) காலை 10 முதல் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், 20 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 10ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ , டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலைதேடும் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News September 18, 2025

ராமேஸ்வரம் கடற்கரையில் 1,000 கிலோ குப்பைகள்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர தூய்மை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி நேற்று (செப். 17) தேசிய கடலோர ஆராய்ச்சி நிறுவனம், MS சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம், சென்னை NCCR இணைந்து 100க்கும் மேற்பட்டோர் கடற்கரை தூய்மை பணியில் ஈடுப்பட்டனர். இதில், சங்குமால், ஓலைக்குடா கடற்கைரைகளில் 600 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன. அதேபோல தொண்டியில் சுமார் 500 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன.

error: Content is protected !!